யாருக்கு மான்சி ..?

Indian Sex Stories Mobile Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > யாருக்கு மான்சி ..? Full Version: யாருக்கு மான்சி ..? You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting. Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 Sexy Legs 06-30-2011, 11:28 PM காலைச் சூரியனின் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம் தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இளம் மஞ்சள் வெயிலாக மாறி..... இன்னும் கொஞ்சநேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப்போகும் ஒரு இனிய காலைப்பொழுது திருச்சியை அடுத்த மணப்பாறை செல்லும் சாலையில் ஒரு மலையடிவாரத்தில் இருந்த அந்த பெண்கள் கல்லூரியின் விடுதியிலிருந்து அவசரமாக தன் தோளில் கிடந்த துப்பட்டாவை சரிசெய்தபடி வந்த மான்சி தனது மணிக்கட்டை திருப்பி பார்த்து வகுப்பு ஆரம்பிக்க இன்னும் நேரமிருப்பதை உணர்ந்து தனது நடையின் வேகத்தை குறைத்து கல்லூரிக்கு செல்லும் செம்மண் பாதையில் நடந்தாள் மான்சி யாரவது அழுந்த பற்றினால் கூட பற்றிய இடம் கன்றிச் சிவக்கும் அளவுக்கு நல்ல வெளுத்து சிவந்த நிறம்.... அழகான நீள்வட்ட முகம்.... அதில் நீண்ட இமைகளுடன் கூடிய அகன்ற விழிகள்...... கத்தி போன்ற கூர்மையான நாசி..... அதன்கீழே இயற்கையாகவே சிவந்த ஈரமான உதடுகள்..... மிகவும் மெல்லிய தேகம்...... அந்த தேத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத கனத்த மார்புகள்..... அதற்கு கீழே கைகளுக்குள் அடக்கலாம் போன்ற சிற்றிடை..... அதன் கீழே அவளின் மார்புகளுக்கு போட்டியாக பருத்த எடுப்பான பின்புறங்கள்..... இளம்வாழைத்தண்டை போன்ற மெல்லிய கால்கள்..... இவளைப்பார்ப்பவர்கள் எப்படித்தான் இந்த கனத்த மார்புகளையும் பருத்த பின்புறங்களையும் இந்த மெல்லிய கால்கள் சுமக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எழும்.... இதனாலேயே மான்சி எப்போதுமே சற்று லூசான உடைகளையே அணிவாள் மான்சி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு போஸ்ட் மாஸ்டரின் மகள்..... வீட்டில் ஒரே செல்ல மகளாக பிறந்து தன் தாயின் அன்பில் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவள்..... தனது பத்தாவது வயதில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் தனது தாயை பறிகொடுத்தவிட்டு தந்தையின் ஆதரவில் வாழவேண்டிய சூழ்நிலை...... ஆனால் மான்சியின் அப்பாவால் தனது தனிமையை தாங்கமுடியாமல் இச்சையை அடக்கமுடியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள..... மான்சியின் பிஞ்சுமனம் தன் தந்தையின் அணைப்பை பங்குபோட்டுக்கொள்ள வந்த அந்த புதிய உறவை ஏற்றுகொள்ள முடியாமல் தனிமையில் வெதும்பி கண்ணீர்விட்டது .... தனது தாயின் அறைக்குள்ளிருந்து கேட்கம் சினுங்கள்களும் கொஞ்சல்களும் சத்தங்களும்.... அவளின் ஆதரவற்ற நிலையை அவளுக்கு புரியவைக்க மனதில் ஒரு இனம்புரியாத ஏக்கத்தோடு நாளுக்கு நாள் மெலிந்து உருக்குலைந்து போக ஆரம்பித்தாள் மான்சியின் சித்தியும் கொடுமைக்காரி இல்லை மான்சிக்கு தேவையானவற்றை ஒரு இயந்திரகதியில் செய்துவிட்டு தனது கணவனுடன் அறைக்குள் போய்விடுவாள் அவ்வளவுதான்……. அதன்பிறகு மான்சி தன் காதை பொத்திக்கொண்டு வெளியே வராந்தாவில் வந்து சுருண்டுகொள்வாள் தனது ஒரே தங்கையின் ஒரே மகளை பார்க்க வந்த மான்சியின் தாய்மாமன் அண்ணாமலை மான்சியின் நிலையைப் பார்த்து தனது மனைவியின் தொல்லையால் தன் வீட்டுக்கும் மான்சியை அழைத்து போகமுடியாமல்.... அவளின் பனிரெண்டாவது வயதில் கொண்டுவந்து விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார்..... அன்றுமுதல் மான்சிக்கு இந்த இருபத்தொரு வயதுவரை ஹாஸ்டல் வாசம்தான்..... அண்ணாமலை மட்டும் தனது தங்கையின் மகளை வாரமொருமுறையாவது வந்து பார்த்துவிடுவார்...... மான்சியின் அப்பா வரதராஜனும் அடிக்கடி வருவார் ஆனால் மான்சியால் அவரிடம் ஒட்ட முடியவில்லை...... இப்போதெல்லாம் அவரை அப்பா என்று கூப்பிடுவதை கூட தவிர்த்துவிட்டாள்...... தன்னுடைய இந்த தனிமை வாழ்க்கைக்கு தனது தந்தையின் மறுமணம்தான் காரணம் என்று நினைத்து அவரை ஒதுக்கினாள் .... ஒரு ஆணுக்கு உண்டான வயதின் தாபங்ளும் உணர்ச்சிகளும் அவள் இன்றுவரை புரிந்து கொள்ளாமல் ஒதுங்கியே வாழ ஆரம்பித்தாள் ஆனால் அவளின் அமைதியான மனதிலும் சிலநாட்களாக காதல் புயல் வீச தொடங்கியிருந்தது..... அவளின் வரண்ட மனதிலும் ஒருவன் நேச விதைகளை தூவி தனது காதல் பார்வைகளால் அதற்க்கு நீர் வார்த்தான் Sexy Legs 06-30-2011, 11:29 PM கல்லூரிக்கு மெதுவாக நடந்து போய்கொண்டிருந்தவளை பின்புறமாக வந்த “ மான்சி” என்ற குரல் தடுத்து நிறுத்த... மான்சி சட்டென திரும்பி பார்த்தாள்..... அவளின் வகுப்பு தோழி ரேகாதான் ஓட்டமும் நடையுமாக இவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மான்சியின் பார்வை ஆர்வத்துடன் ரேகாவையும் தாண்டி கல்லூரியின் கேட்டை நோக்கி போக...... அங்கே இவளின் பார்வைக்காகவே காத்திருந்து போல ரேகாவின் அண்ணன் ரகுராம் நின்றிருந்தான்...... மான்சி தன்னை பார்ததும் முகம் மலர புன்னகையுடன் தலையசைத்து ‘கிளம்பட்டுமா’ என்பது போல கேட்க..... மான்சி முதலில் அவன் முகத்தையே பார்த்தவள் அவன் தலையசைத்ததும் வெட்கத்துடன் தலைகுனிந்து சரி என்பது போல தலையசைக்க..... ரகு அவளின் அந்த ஒற்றை தலையசைப்புக்காக இந்த உலகையே விலை பேசலாம் என்று நினைத்து தனது பைக்கில் ஏறி உட்கார்ந்து மறுபடியும் அவள் தன்னை பார்க்கிறாளா என்று திரும்பி பார்த்தான் மான்சி தனக்கு முன்னால் வந்துகொண்டிருந்த ரேகாவின் தலைக்கு மேலே எட்டி அவனைப்பார்க்கவும் ..... ரகு உற்சாகத்துடன் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்து மறுபடியும் அவளைப் பார்த்து சற்று பலமாக தலையசைத்து விடைபெற..... மான்சி வெட்கப் புன்னகையுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் அவள் பின்னே வந்த ரேகா “ ஏய் மான்சி இங்கே என்னடி நடக்குது.... என்னை பக்கத்தில் வச்சுகிட்டே என் அண்ணனை சைட் அடிக்கிறயா....இருஇரு இனிமேல் ரகுவை வீட்டில் விட்டுட்டு என்னோட ஸ்கூட்டியில் காலேஜுக்கு வந்திர்றேன் அப்புறமா ரெண்டு பேரும் எப்படி சைட்டிக்கிறீங்கன்னு பார்க்கலாம்” என்று குறும்புடன் கூற மான்சியின் முகம் சோகத்தை சுமக்க “ அவர் கிளம்பட்டுமான்னு கேட்டார்... நான் சரின்னு தலையாட்டினேன் அவ்வளவுதான்.... இதுக்கு போய் ஏன் அவரை வரவேண்டாம்ன்னு சொல்ற”.....என்று கவலை தோய்ந்த குரலில் கூற “ அதைதான் ஏன்னு கேட்கிறேன்.... அவன் கொண்டுவந்து விட்டது என்னை.... ஆனால் கிளம்பட்டுமான்னு கேட்கறது உன்கிட்டே.... அதுதான் எனக்கு புரியவேயில்லை” என்று ரேகா அப்பாவியாய் கைகளை விரித்து கேட்டாள் மான்சியின் கண்கள் லேசாக கலங்க “ ஸாரி ரேகா இனிமே நீங்க ரெண்டு பேரும் வர்ற நேரத்தில் நான் வரமாட்டேன் “ என்று சோகமாக சொல்ல “ ஏய் நான் சும்மா விளையாட்டுக்குதான்டி சொன்னேன் அதுக்குபோய் கண்கலங்கற.... ரகு என்னடான்னா என்னை கொண்டு வந்து விடுறேன்ற சாக்கில் வந்து காலேஜ் கேட்கிட்ட தவமிருக்கான்.... நீ என்னடான்னா கரெக்டா அவன் வர்ற நேரத்தில்தான் விடுதியில இருந்து வெளியே வர்ற.... அன்னிக்கு நீ தலைவலின்னு சொல்லி காலேஜ்க்கு வரலை... ரகு என்னை கொண்டுவந்து விட்டுட்டு நீயும் வருவே வருவேன்னு கேட்டுக்கிட்டயே தவமிருக்கான் கடைசியா வாட்ச்மேன் வந்து என்ன வேனும்னு விசாரிச்சதும்தான் பைக்கை எடுத்துகிட்டு போயிருக்கான்...... நான் சாயங்காலம் வீட்டுக்கு போனா என்னமோ பெண்டாட்டியை பறிகொடுத்தவன் போல ஆபிஸ்க்கு கூட போகாம உட்கார்ந்திருக்கான்.... உனக்கு தலைவலி அதனாலதான் காலேஜ்க்கு வரலைன்னு சொன்னதும் அவசரமா குளிச்சுட்டு தெருக்கோடியில் இருக்கும் பிள்ளையாருக்கு போய் தேங்காய் உடைக்கிறான்.... என்னடா இதெல்லாம்ன்னு கேட்ட ஒன்னுமில்ல ரேகான்னு அசடு வழியறான்” .... என்று ரேகா தனது அண்ணனைப் பற்றி வளவளவென்று பேசிக்கொண்டே இருக்க இவளின் சலசலப்புக்கு மான்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போகவே .... தன் முன்னால் போன மான்சியை கைபிடித்து தடுத்து நிறுத்தி அவளின் கண்களை நேராகப் பார்த்து... ” ஏன் மான்சி எதுவுமே பேசமாட்டேங்குற.... நீயும் ரகுவும் ரொம்ப நாளா ஒருத்தரையொருத்தர் விரும்புறீங்கன்னு எனக்குதெரியும்.... ஆனா எப்பதான் ரெண்டுபேரும் மனம்விட்டு பேசுவீங்க.... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி கண்ஜாடைலயே பார்த்துக்குவீங்க மான்சி..... நான் வேனும்னா நீங்க ரெண்டுபேரும் பேசறதுக்கு ஏற்பாடு பண்ணவா.... ஏன் கேட்கிறேன்னா உன்னோட படிப்பு முடிய இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு அதுக்குள்ள ரெண்டுபேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.... என்ன மானசி நான் ஏற்பாடு செய்யவா”... என்று அவள் கண்களை பார்த்தபடி ரேகா கேட்க மான்சியின் முகம் வெட்கச்சிவப்பை பூசிக்கொள்ள தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி வேண்டாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் “ ச்சே எப்படியாவது ஒழிஞ்சு போங்க உங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் மாட்டிகிட்டு அவஸ்தை படுறேன் “ என்று எரிச்சலுடன் கூறிய ரேகா மான்சியை முந்திக்கொண்டு கோபமாக கல்லூரிக்குள் நுழைந்தாள் " என்னுள் உன்னைத் தொலைத்துவிடு.... " கண்டுபிடித்துக் கொடுப்பதற்குக் ..... " கட்டணமாக என்னையே தருகிறேன்...! Sexy Legs 06-30-2011, 11:29 PM அன்று மாலை கல்லூரி முடிந்து மான்சியும் ரேகாவும் வெளியே வந்தனர்..... ரேகா எதையோ வழவழவென்று பேசிக்கொண்டே வர.... மான்சிக்கு எதுவுமே காதில் விழவில்லை.... அவள் சிந்தனை எல்லாம் காலையில் ரேகா சொன்ன விஷயத்திலேயே இருந்தது..... ‘இன்னும் ஒருமாதமே இங்கே இருக்கப்போகிறேன் அதன்பிறகு Msc படிக்க மாமா எந்த காலேஜ்ல சேர்ப்பாரோ... அப்படியிருக்க ரேகா சொன்னது போல ஏன் ரகுவிடம் பேசகூடாது.....என்று நினைத்தாள் ‘ஆனால் இந்த இரண்டு வருடங்களாக அவன் தினமும் மான்சி பார்த்து முகம் மலர புன்னகை செய்வதும்... தலையசைத்து கிளம்பட்டுமா என்பதும்..... அதிகமாகப் போனால் எப்படியிருக்க மான்சி என்ற ஒரு வார்த்தையை தவிர வேறெதுவும் பேசியதில்லை.... மான்சி இதுவரை ஜந்து முறை ரேகாவின் வீட்டுக்கு போயிருக்கிறாள்..... அப்போதெல்லாம் அவள் ரேகாவிடமும் அவள் அம்மாவிடமும் மான்சி தன் காதுகளில் தொங்கும் ஜிமிக்கிகள் ஆட தலையைச் சாய்த்து விழிகளை விரித்து விரல்களை நீட்டி மடக்கி விரித்து நடனம் புரிந்தபடி பேசும் அழகை சற்று தள்ளிநின்று கைகட்டி ரசித்தபடி பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர அப்பவும் மான்சியிடம் பேச முயற்சித்ததில்லை..... இப்படி அவன் மனதில் இருப்பதைப் பற்றி தெரியாமலேயே அவனிடம் தன் இதயத்தை இழந்துவிட்டோமே.....இப்போ அவனிடம் வலியப்போய் பேசினால் இல்லை நான் சும்மாதான் உன்னை பார்த்தேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது....என்று மான்சிக்கு குழப்பமாகவும் இருந்தது ஆனால் அவள் மனது சொன்னது அவன் நிச்சயமாக உன்னை காதலிக்கிறான் என்று.... ஏனென்றால்.... அவன் கண்கள் பொய் சொல்லவில்லை அது தினமும் அவன் காதலை மான்சியிடம் சொன்னது..... இவளைப்பார்த்தாலே மலர்ந்துவிடும் அவன் முகமும்.... பேசத்துடிக்கும் அவனின் உதடுகளும்..... இவள் திரும்பிப்பார்க்க மாட்டாளா என்று அவன் தவிக்கும் தவிப்பையும் பார்க்கும்போது இவள் மீது அவனுக்கு காதல் இல்லை என்று எப்படி சொல்வது ஆனால் ஏன் அவன் எதையுமே சொல்லாமாலே இந்த இரண்டு வருடங்களாக மவுனம் சாதிக்கிறான்..... அவன் மவுனத்துக்கு காரணம் என்ன.... ஒன்றுமே புரியவில்லையே என மான்சியின் மனம் தவித்தது ‘இதெல்லாம் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரோ என்று கலக்கமாகவும் இருந்தது.... சிறுவயதிலிருந்தே தகப்பனுக்கும் மேலாக தன்னிடம் அன்பு காட்டும் அவருக்குத்தெரியாமல் தன் வாழ்க்கையில் எதுவுமே நடக்கக்கூடாது என்று நினைத்தாள்..... மான்சியின் தாயார் இறந்த பிறகு அவளுக்கு சேரவேண்டிய தாய்வழி சொத்துக்களை விற்று மான்சியின் பெயரில் வங்கியில் போட்டுவிட்டு அதிலிருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் இந்த பத்து வருடங்களாக தனது பணத்திலேயே மான்சியின் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளம் தனது மாமாவின் சம்மதத்துடன்தான் தனது வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைத்தாள் ஆனால் கிராமத்து மனிதாரான அவர் இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வாரோ என்று பயமாகவும் இருந்தது......அப்படியே ரகு தனது சம்மதத்தை சொன்னாலும் எதையுமே தன் மாமாவிடம் பேசியபிறகே முடிவு செய்யவேண்டும்’ என மான்சி எதையெதையோ போட்டு மனதை குழப்பி ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் தவித்தபடியே வர.. ரேகா அவள் தோளில் கைவைத்து “ ஏய் என்னடி உனக்கு குழப்பம்.... காலையிலிருந்து உன் முகமே சரியில்லை..... எதையோ யோசிச்சுகிட்டே இருக்க.... கேட்டா சொல்லமாட்டேங்கற..... இன்னிக்கு கிளாஸ்ல வேற சரியா கவனிக்காம அந்த சுடுமூஞ்சி மேக்ஸ் லெக்சரர்கிட்ட நல்ல திட்டு வாங்கின..... என்னடி ஆச்சு உனக்கு.” என ரேகா கவலையான குரலில் கேட்க மான்சி தலைகுனிந்து எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள் “ அடச்சே எதை கேட்டாலும் இப்படி தலையசைத்தே பதில் சொல்லு ..... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அந்த அசைக்கிறத் தலையை அப்படியே கிள்ளியெறியலாம் போல இருக்கு.... ஆனால் எனக்கு அண்ணியா வரப்போறவ தலையில்லாத முண்டமாக இருந்தா நல்லாயிருக்காதேன்னு தான் விடுறேன் இல்ல அவ்ளோதான்..... என்னை காலேஜ்ல எல்லாரும் கிண்டல் செய்றாங்கடி எப்படி இந்த உம்முனாமூஞ்சிக்கிட்ட போய் பிரன்ட்ஸிப் வெச்சுருக்கேன்னு ச்சே எப்பத்தான் நீ மாறுவே மான்சி ” என ரேகா எரிச்சலுடன் பேச Sexy Legs 06-30-2011, 11:30 PM “ நான் எப்பவுமே இப்படித்தான்.... உனக்கு பிடிக்கலைன்னா என்கூட பேசாதே ரேகா” என்று கறாராக மான்சி கூறியதும் ரேகாவுக்கு முணுக்கென்று கோபம்வர “ இதை நான் மூணுவருசத்துக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும் இனிமேல் யோசிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை..... நீ என்வீட்டுக்கே அண்ணியா வரப்போற இந்த நேரத்தில் உன்னை பிடிக்கலைன்னு நான் சொன்னா என் அண்ணன்காரான் என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்பான்.... அவனுக்கு உன்மேல அவ்வளவு பைத்தியம்.... யப்பா இந்த ரெண்டு உம்னா மூஞ்சியும் சேர்ந்து எங்கவீட்டையே தியான மண்டபம் மாதிரி ஆக்கப்போகுதுங்கன்னு நினைக்கிறேன்”.. என்று ரேகா தன் தலையில் கைவைத்தபடி சொல்ல அப்போது அவள் மொபைல் ஒலித்ததுயாரென்று ரேகா பார்த்துவிட்டு மான்சியை பார்த்து கண்சிமிட்டி “ ஏய் உன் ஆளுதான்டி லைன்ல இருக்கான் பேசறியா” என்று மொபைலை மான்சியிடம் நீட்ட.... அவள் கலவரத்துடன் தலையசைத்து இரண்டி பின்னேப் போனாள் “ சரி சரி அதுக்குப்போய் ஏன் இப்படி அலற்ர நானே பேசறேன்” என்றவள்....சற்றுத்தள்ளி நின்று ரகுவிடம் வெகுநேரம் பேசிய ரேகா மொபைலை அனைத்து தனது கைப்பையில் போட்டவாறு உற்சாகத்துடன் மான்சி அருகில் வந்தாள் “ ஏய் மான்சி எப்படியோ என் அண்ணனுக்கு தைரியம் வந்துருச்சுடி இன்னிக்கு ஆறுமணிக்கு உன்னை ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிவரச்சொன்னான் உன்கிட்டே ஏதோ முக்கியமா பேசனுமாம்.... ம்ம் நீ போய் ரெடியாகு நான் வார்டன்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கறேன்” என்று ரேகா மான்சியின் தோளில் கைப்போட்டு விடுதிக்கு தள்ளிக்கொண்டு போக மான்சிக்கு இருண்டு கிடந்த தன் உலகமே சட்டென வெளிச்சமானது போல இருக்க அந்த வெளிச்சத்தின் பிரதிபலிப்பு அவள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது விடுதியில் தனது அறைக்குள் நுழைந்தவள் மான்சி புத்தகப்பையை கட்டிலில் எறிந்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தவளுக்கு எந்த உடையை அணிவது என்று குழப்பமாக இருந்தது..... ரகுவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரியவில்லையே என்று வருந்தினாள்.... ச்சே ரேகாவிடம் கேட்டிருக்கலாமே என்று தன்னை கடிந்துகொண்டவள்.... ம்ஹூம் அவளிடம் கேட்டால் நிச்சயம் கிண்டல் செய்தே தன்னை கொன்றுவிடுவாள் என நினைத்து .... அவளுக்கு பிடித்த வெள்ளைநிறத்தில் எம்பிராய்டரி வேலைபாடுகள் நிறைந்த ஒரு அழகான சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு தயாராகி வெளியே வந்தாள் அதற்க்குள் வார்டனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வந்த ரேகா மான்சியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் “ வாவ் சூப்பர்டி யப்பா எவ்வளவு அழகுடி நீ.... ம்ம் உன் அழகில் மயங்கி எங்கண்ணன் இன்னிக்கு மட்டையாகப் போறான்.....சரி சரி வா மணி இப்பவே 5-40 ஆயிருச்சு நாம போக சரியாயிருக்கும்” என்று மான்சியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கல்லூரியைவிட்டு வெளியேறி ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் ஏறி அமர்ந்து போகவேண்டிய இடத்தை சொல்ல ஆட்டோ வேகமெடுத்தது " மனிதன் நிலவில் காலடி வைத்தது அதிசயமில்லை.... " காதலில் காலடி வைப்பதுதான் அதிசயம் " மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்..... " புதிய கண்டுபிடிப்பு.......காதல்..! Sexy Legs 06-30-2011, 11:30 PM மான்சியும் ரேகாவும் ஐஸ்கிரீம் பார்லர் சென்று இறங்கியபோது இவர்களுக்கு முன்பே ரகு வந்து அங்கே காத்திருந்தான்..... மான்சியைப் பார்த்ததும் ரகுவின் சிவந்த முகத்தில் கன்னங்குழிய அழகிய சிரிப்பு தோன்ற முகம் பளிச்சென்று மலர்ந்து வா என்பது போல் தலையசைத்தான்... அவன் கண்களுக்கு ரேகா தெரியவேயில்லை மான்சி அவனை பார்த்ததும் வெட்கமாய் புன்னகைத்து ரேகாவின் பின்னால் மறைய.... ரேகா அவளை இழுத்து முன்னால் விட்டுவிட்டு “ அண்ணா இவளை உள்ளே கூட்டிப்போய் உட்காரவை எனக்கு பக்கத்தில இருக்கிற புக் ஷாப்ல கொஞ்சம் வேலையிருக்கு போயிட்டு வந்துர்றேன்” என்று ரேகா நாசுக்காக நழுவி போக..... மான்சிக்கு திடீரென்று ஒரு பதட்டம் வந்து உடலில் ஒட்டிக்கொள்ள ரகுவை பார்ப்பதை தவிர்த்து திரும்பி நின்று போக்குவரத்தை மிகவும் கவனமாக பார்ப்பவள் போல பார்க்க..... சிறிதுநேரத்தில் அவளின் பிடரியில் சூடான மூச்சு காற்றுப்பட.... சட்டென மான்சியின் உடல் விரைத்துக்கொண்டது “ இன்னும் எவ்வளவு நேரம் மான்சி நான் உன் பின்னாலே நிக்கனும்.... எனக்கு ஓகேதான் ஆனா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க மான்சி வா உள்ளே போகலாம்” என்று மெல்லிய குரலில் ரகு அழைக்க அவனுடைய குரல் அவள் பிடரியில் பட்டு அவள் உடலை மேலும் சிலிர்க்க வைத்தது..... இப்போது உள்ளே போக திரும்பினால் நிச்சயம் அவன்மீது மோதவேண்டியிருக்கும்.... முன்னால் நகர்ந்தால் பிளாட்பாரத்தை விட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்..... அது அவனை அவமதிப்பது போலாகிவிடும் ..... என்ன செய்யலாம் என்று மான்சி யோசித்தபடி இருக்க “ என்ன மான்சி தயக்கம் ரேகா இல்லாததால் நான் ஏதாவது இண்டீசன்டா பிகேவ் பண்ணுவேன்னு நெனைக்கறயா மான்சி “ என மறுபடியும் அவன் ரகசியகுரலில் கேட்டான் மான்சிக்கு அந்த குரல் ரொம்ப சித்ரவதையாக இருந்தது.... இதுவரை அனுபவித்தறியாத உணர்வுகள் அவள் உடலிலும் மனதிலும் சடசடவென எழ..... அவசரமாக தன் கைகளை இறுக்கி மூடி..... கால்விரல்களை தரையில் அழுத்தி ஊன்றி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றாள்.... ச்சே இவன் ஏன் என் பின்னால் நின்றுகொண்டு பேசியே என்னை சிலிர்க்க வைக்கிறான்... என நினைத்து மெதுவாக பக்கவாட்டில் நகர்ந்து திரும்பி ஐஸ்கிரீம் கடைக்குள் போக “ ம் அப்படியே திரும்பி என்மேல் சாய்வேன்னு பார்த்தேன் ம்ஹூம் ரகு உனக்கு அவ்வளவுதான்டா அதிர்ஸ்டம் “ என்று போலியாக சலித்தபடி ரகு பின்னால் வர..... அவனின் பேச்சை கேட்ட மான்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது.... தன் வாயைப் பொத்திக்கொண்டு களுக்கென்று சிரித்துவிட்டாள் “ ச்சே இதைக்கூட என்னைப்பார்த்து செய்யக்கூடாதா நீ சிரிச்சு நான் இதுவரை பார்த்ததேயில்லை மான்சி “ என்று ரகு ஏக்கம் நிறைந்த குரலில் கூற மான்சிக்கு ஏக்கம் நிறைந்த அந்த குரல் மனதில் புகுந்து என்னவோ பண்ண சட்டென நின்றுவிட்டாள் ரகுவுக்கு மான்சியின் மனநிலை புரிய “ மான்சி வழியிலேயே நிக்க வேனாம்.... அதோ அங்கே ஏழாம் நம்பர் டேபிள் ரிசர்வ் பண்ணிருக்கேன் வா போகலாம்” என்று கூறிவிட்டு அவன் முன்னால் போய் ஒரு சீட்டில் அமர மான்சி அவன் எதிர் சீட்டில் அமர்ந்தாள Sexy Legs 06-30-2011, 11:31 PM அவன் கண்கள் மான்சியை தவிர வேறெங்கும் திரும்பவில்ல “ மான்சி என்னுடைய பலநாள் கனவு இன்னைக்குத்தான் நிறைவேறியிருக்கு..... இதுவரைக்கும் உன்னை நான் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை மான்சி.....உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மான்சி இன்னிக்கு என்ன நாள் தெரியுமா...........” என்று சொல்லிவிட்டு ரகு பாதியிலேயே நிறுத்திவிட்டு மான்சியின் முகத்தை ஆழமாக பார்க்க மான்சிக்கு ஒன்றும் புரியவில்லை இன்னிக்கு என்ன நாள்.... இவன் பிறந்தநாளாய் இருந்தால் நிச்சயம் ரேகா சொல்லியிருப்பாள்.... வேறு என்வாயிருக்கும் என்று யோசித்துப் பார்த்து ஒன்றும் புரியாமல்...... என்ன நாள் என்று அவன் முகத்தை பார்த்து விழியசைவில் கேட்டாள் “ ம்ஹூம் இப்படியெல்லாம் கண்ணசைவில் கேட்டால் சொல்லமாட்டேன்.... வாயைத்திறந்து கேட்டால்தான் சொல்வேன்” என்று அவளின் செப்பு இதழ்களை பார்த்தபடி ரகு சொல்ல மான்சி சிறிது தயக்கத்திற்குப் பிறகு “ இன்னிக்கு என்ன நாள்” என்று சின்ன குரலில் கேட்க “ ம் இரண்டு வருஷத்துக்கு முன்னே என்னோட அழகு தேவதையை நான் முதன்முதலாக சந்திச்ச அந்த பொன்னான நாள்.... அவள் கண்களால் என்னை கைதுசெய்த நாள்.... நான் என் இதயத்தை அவள் காலடியில் சமர்ப்பணம் செய்த நாள்... உனக்கு புரியுதா மான்சி” என்று அவள் கண்களை பார்த்துக்கொண்டே ரகு கேட்டான் மான்சிக்கா புரியவில்லை அவள் இதயம் ஒருமுறை நின்று பிறகு துடித்தது.... அவனுடைய நேசத்தை அவன் வார்த்தைகளில் சொல்ல.... நான் ஏன் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி அவள் மனதில் பலமாக எழுந்தது.... அப்படியானால் எனது நேசம் பலமற்றதா...... இல்லையே தினமும் இவனைப் பார்க்க ஏங்கித்தவித்தேனே அதெல்லாம் பொய்யா...... என்று எண்ணமிட்டுக் கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கலங்கிய கண்களை பார்த்தும் பதட்டமான ரகு “ என்ன மான்சி உனக்கு நான் சொன்னது பிடிக்கலையா” என்று கேட்க மான்சி அதில்லை என்பது போல தலையசைத்தாள் பதட்டம் தனிந்தவனாக தன் நெஞ்சில் கைவைத்து நிம்மதியாக மூச்சுவிட்ட ரகு “அப்ப வேறென்ன மான்சி” என ரகு மென்குரலில் கேட்டான் “நான் இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கலையே ஏன்” என்று அவனிடமே மான்சி திருப்பி கேட்டாள் அவள் கண்ணீரின் காரணத்தை அறிந்து மனம் ரெக்கைகட்டி பறக்க “ச்சீ இதுக்கு போயா கண்கலங்கின நான் என்னவோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன்.... மான்சி உனக்கு படிக்கவே நேரம் சரியாயிருக்கும் இதுல நாம சந்திச்சதை எப்படி நாள் தேதியெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியும்.... அதுவுமில்லாம நான்தானே முதலில் உன்னை பார்த்தேன் அதனால எனக்கு இன்னும் அந்த நாள் பசுமையா என் ஞாபகத்தில் இருக்கு.... சரி மான்சி இதையெல்லாம் விடு நான் இதைவிட முக்கியமான ஒருவிஷயத்தை பத்திதான் இப்போ பேசவந்தேன்” என்று நிறுத்திவிட்டு அவள் முகத்தை உற்று பார்க்க Sexy Legs 06-30-2011, 11:31 PM மான்சிக்கு குழப்பமாக இருந்தது தன்னுடைய நேசத்தை சொல்வதைவிட இவனுக்கு அப்படியென்ன முக்கியமான விஷயம் இருக்கிறது அவளுடைய குழப்பமான முகத்தை பார்த்துக்கொண்டே “ மான்சி நான் சொலறதை கவனமா கேளு.... நான் உன்னை முதன்முதலாக சந்திச்சப்ப உன்னோட அழகுதான் என்னை கவர்ந்தது.... வீட்டுக்கு வந்து ரேகாகிட்ட உன்னை பத்தி விசாரிச்சேன்..... அவ உன் குடும்பத்தை பத்தியும் உன்னோட இளவயது இழப்புகளை பத்தியும் நிறைய சொன்ன.... அதன்பிறகுதான் உன்னை மனசார நேசிக்க ஆரம்பிச்சேன்... வாழ்ந்தா உன்கூடதான் வாழனும்னு முடிவு பண்ணேன் மான்சி .... உன்னை எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும் கலங்கவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்”.... இதை அவன் சொல்லிகொண்டு இருக்கும் போதே இவன் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்தது ரகு அதில் ஒரு கப்பை எடுத்து மான்சியின் முன்பு வைத்துவிட்டு..”ம் சாப்பிடு மான்சி” என்று சொல்லிவிட்டு இவன் கப்பில் இருந்த ஐஸ்கிரீமை ஸ்பூனால் கிளறிக்கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தான் “என்னடா இவன் இவ்வளவு நாளா இதையெல்லாம் சொல்லாம இப்போ வந்து சொல்றானேன்னு நீ நெனைப்ப.... உன்னோட படிப்பு என்னால டிஸ்டர்ப் ஆகக்கூடாதுன்னுதான் நான் இவ்வளவு நாளா பொருமையா இருந்தேன்.... இன்னும் ஒரு மாசத்துல உன் படிப்பு முடிஞ்சதும் என் அப்பா அம்மாவோடு வந்து உன் மாமாகிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேசனும்னு நெனைச்சேன் மான்சி.... ஆனால் இப்போ உடனடியாக சொல்லவேண்டிய சூழ்நிலை வந்திருச்சு மான்சி” என்று தயங்கி நிறுத்தியவன்.... அவளின் வலதுகையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டான் .... இவ்வளவு நேரம் தெளிவாக இருந்த அவனது முகம் இப்போது கவலையுடன் இருக்க மெலிந்த குரலில் பேசினான் “மான்சி என் ஆபிஸ்ல எனக்கு பிரமோஷன் குடுத்து ஆறுமாச டிரைனிங்காக என்னை யுஎஸ் அனுப்பறாங்க.... இந்த விஷயத்தை என் வீட்ல கூட இன்னும் யாருக்கும் சொல்லலை உன்கிட்டதான் மொதல்ல சொல்றேன்.... மொதல்ல எனக்கு யுஎஸ் போக விருப்பமில்லை.... ஆனால் இந்த பிரமோஷனால நம்ம பியூச்சர் நல்லாருக்கும்ன்னு யோசிச்சபிறகுதான் போகலாம்னு முடிவு பண்ணேன்..... என்ன மான்சி நான் போகட்டுமா” என்று அவள் கண்களையே பார்த்துக்கொண்டு ரகு கேட்க அவன் அவளை முன்நிறுத்தி அப்படி கேட்டது மான்சிக்கு அவளை எங்கே வான்மேகங்களுக்கு நடுவில் சிம்மாசனமிட்டு அமர்த்தியது போல இருக்க அவள் முகம் பூவாய் மலர “அதான் உங்க பியூச்சர்க்கு நல்லதுன்னு சொல்றீங்களே பின்ன என்ன போகவேண்டியதுதானே”.... என்று சொல்லி அவள் வாயை மூடும்முன் “நான் சொன்னது நம்மோட பியூச்சர் நல்லாயிருக்கும்னு.... என்னோட பியூச்சரை பத்தி இல்லை” என்று அழுத்தமான குரலில் ரகு கூற தனது வார்த்தை அவனை பாதித்ததை உணர்ந்த மான்சி சந்தோஷச் சிரிப்புடன் “இன்னும் ஆறுமாசம் தான அதன்பிறகு இங்க வரப்போறீங்க.... அதுக்கு போய் ஏன் இப்படி முகத்தை உம்முன்னு வச்சிருக்கீங்க... சந்தோஷமா போய்ட்டு வாங்க” என்று மான்சி தெளிவாக சொல்ல “அப்படின்னா நான் வர்றவரைக்கும் எனக்காக இதே அன்போட காத்திருப்பாயா மான்சி” என்று ரகு கிறக்கமான குரலில் கேட்க மான்சி தலைகவிழ்ந்து “ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல ரகு தன்னுடைய கைகளுக்குள் இருந்த அவள் கையை எடுத்து தன் உதடுகளில் பதிக்க.... இதை எதிர்பார்க்காத மான்சி அதிர்ந்து போய் அவன் கைகளை உதறிவிட்டு பதட்டத்துடன் எழுந்து நின்றுவிட்டாள் “ஸாரி ஸாரி மான்சி நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்.... எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க மான்சி ப்ளீஸ் உட்கார்” என்று ரகு கெஞ்ச மான்சி சுற்றிலும் தன்னை வேடிக்கை பார்பதை உணர்ந்து மறுபடியும் உட்கார்ந்துவிட்டாள் “ஸாரி மான்சி இதெல்லாம் உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் என்னை மன்னிச்சுடும்மா” என இறங்கிய குரலில் ரகு மறுபடியும் பரிதாபமாக கேட்க அவனின் அந்த குரல் மான்சியை என்னவோ செய்ய “ பிடிக்காதுன்னு இல்லை பொதுஇடத்தில் இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணதும் கொஞ்சம் பதட்டமாகிட்டேன்” என்று அவனை சமாதனப்படுத்த கூறினாள் “அப்படின்னா தனிஇடத்தில் சொல்லிட்டு கொடுத்தா ஓகேயா” என்று ரகு குறும்புடன் கேட்க “ம்ம் ஆசைதான் அதுக்கு வேற ஆளைப்பாருங்க” என்றவள் “ இன்னும் ரேகாவை கானோம் வாங்க வெளியே போய் பார்க்கலாம்” என்று எழ முயற்ச்சிக்க “கொஞ்சம் இரு மான்சி இன்னும் ஒருவிஷயம் இருக்கு” என்று அவளை தடுத்தவன் தனது இடுப்பை எக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய நகை டப்பாவை எடுத்து அவள் முன் நீட்டி “இது நம்முடைய இந்த முதல் சந்திப்புக்கு என்னோட அன்பு பரிசு வாங்கி பாரு மான்சி” என்று அவள் கையில் வைக்க மான்சி அதை வாங்கி திறந்து பார்த்தாள் உள்ளே ஒரு சிறிய பிளாட்டினம் மோதிரம் இருந்தது.... மான்சி நிமிர்ந்து அவனைப்பார்த்து “இப்போ எதுக்கு இதெல்லாம்” என்றாள் “என்ன மான்சி இப்படி கேட்டுட்ட இந்த ரெண்டு வருஷத்துக்கு அவனவன் என்னென்னவோ குடுத்திருப்பான் நான் ஏதோ என்னால முடிஞ்சது இந்த மோதிரத்தை குடுத்தேன்” என்று ரகு கிண்டல் குரலில் கூற மான்சி அந்த மோதிரத்தை நகை டப்பாவில் இருந்து வெளியே எடுத்து பார்க்க.... "குடு மான்சி நான் போட்டுவிடறேன்" என்று ரகு கையை நீட்ட "இல்ல பரவாயில்லை நானே போட்டுக்கிறேன்" என்ற மான்சி தன் விரலில் அந்த மோதிரத்தை போட்டப்பார்த்தாள்....அவளின் எந்த விரலுக்கும் போகாமல் மோதிரம் ரொம்பவும் லூசாக இருந்தது.... ரகுவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது " சரி நான் அப்புறமா போட்டுக்கிறேன்" என்று மான்சி மோதிரத்தை தனது கைப்பையில் வைத்துகொண்டாள் அப்போது ரேகா வருவது தெரிய இருவரும் அமைதியாக ஏற்கனவே கரைந்திருந்த ஐஸ்கிரீமை மேலும் கலக்கி கரைத்தனர் Sexy Legs 06-30-2011, 11:32 PM ரேகா வருவதை பார்ததும் இருவரும் அமைதியாகிவிட..... மான்சி அருகில் அமர்ந்த ரேகா “ஏய் இது ரெண்டுபேரும் ஐஸ்கிரீமை கூழாக்கிட்டீங்க.... ச்சே சாப்பிடமா இப்படி வேஸ்ட் பண்றது நேஷனல் வேஸ்ட்ப்பா”.... என்று சலிப்புடன் கூறிவிட்டு மான்சியைப் பார்க்க..... மான்சி ஸ்பூனால் இன்னும் நன்றாக ஐஸ்கிரீமை கலக்கிக்கொண்டு இருக்க.....அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரகு...... “ என்ன மான்சி வேற கொண்டு வரச்சொல்றேன்.... அதை எடுத்து வை” என்று கூறி மான்சி எதிரில் இருந்த கப்பை எடுத்து தள்ளி வைத்தான் “டேய் அண்ணா நானும் இங்கதான் இருக்கேன் எனக்கு ஏதாவது ஆடர் பண்ற ஐடியா இருக்கா” என்று ரேகா நக்கலாக கேட்டாள் “ம் உனக்கு என்ன வேனும்னு சொல்லு ரேகா” என்ற ரகு பேரரை அழைக்க “ ம்ஹூம், ரொம்ப நேரமாயிடுச்சு அதனால எதுவும் வேண்டாம்.... மொதல்ல இவளை கொண்டுபோய் நான் ஹாஸ்டல்ல விடனும் இல்லேன்னா அந்த வார்டன்னுக்கு பதில் சொல்லமுடியாது.... ஏற்கனவே அனுப்பமுடியாதுன்னு சொன்னவரை கொஞ்சிகேட்டு இவளை கூட்டிட்டு வந்தேன்” என்ற ரேகா எழுந்துகொண்டு கிளம்பு என்பது மான்சியை பார்க்க.... அவள் ரகுவை பார்த்தாள் அவள் அனுமதிக்காக தன்னை பார்த்தது ரகுவுக்கு உற்சாகத்தை கொடுக்க..... மலர்ந்த முகத்துடன் “ ம் கிளம்பு மான்சி” என்று அவனும் எழுந்துகொண்டான் மான்சியும் ரேகாவும் வெளியே வர.... பில்லுக்கானப் பணத்தை கொடுத்துவிட்டு ரகுவும் வெளியே வந்தான்..... சென்று கொண்டிருந்த ஒரு காலி ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அதில் இவர்களை ஏத்திவிட்டவன்.... உள்ளே குனிந்து கையை நீட்டி “மான்சி” என்று அழைத்தான் மான்சி அமைதியாக இருக்க.... ரேகா அவள் கையை எடுத்து ரகுவின் கைகளில் வைக்க... ரகு மான்சியின் கையை பிடித்துக்கொண்டு.... “மான்சி கவனமா படி.... மனசுல எந்த குழப்பமும் வேண்டாம்..... நான் என்னிக்கு யுஎஸ் கிளம்பறேன்னு ரேகாகிட்ட தகவல் சொல்றான்..... என்னை அனுப்பிவைக்க நீ கட்டாயம் ஏர்போர்ட் வரனும்.... வருவியா மான்சி...?.” என்று அவள் விரல்களை வருடிக்கொண்டே ரகு கேட்க மான்சி நிமிர்ந்து அவன் கண்களை பார்த்துக்கொண்டே “ம் வருவேன்” என்று தலையசைத்து கூற ரகுவின் மனதில் பாரதிராஜாவின் படங்களில் வரும் வெள்ளை தேவதைகள் வந்து கைகளை விரித்து லாலாலா என்று பாட்டு பாடி நடனமாட...... கண்களில் தேக்கிய அபரிமிதமான காதலோடு மான்சியின் விரல்களை முத்தமிடுவதற்குக்காக தன் உதட்டுக்கு எடுத்துச்செல்ல.... ஆட்டோ டிரைவர் திரும்பப் பார்த்து “சார் எனக்கு நேரமாச்சு வேற சவாரிக்கு போகனும் கிளம்பட்டுமா சார்” என்று கேட்க ரகு ஏமாற்றத்துடன் மான்சியின் கையை விட்டுவிட்டு “பை மான்சி” என்று விடைகொடுத்தான் ஆட்டோ கிளம்பியதும் மான்சி எதையோ பெரிதாக சாதித்தவள் நிம்மதியுடன் சீட்டில் சாய்ந்து கொள்ள..... ரேகாதான் புலம்பிக்கொண்டே வந்தாள் “ச்சே இவனெல்லாம் ஒரு அண்ணனா என் மூஞ்சக்கூட திரும்பிப் பார்க்கலை..... இப்பவே இப்படின்னா ரெண்டுபேருக்கும் மேரேஜ் ஆயிட்டா யார் நீன்னு கேட்ப்பான் போல”.... என்று புலம்பியவள் மான்சியிடம் திரும்பி “ஏன்டி ஐஸ்க்ரீமைக்கூட சாப்பிடாம அப்படி என்னத்தடி பேசினீங்க”என கேட்க “ம்ஹூம் அதை உங்க அண்ணன் கிட்டயே கேளு” என்று மான்சி வெட்கத்துடன் பதில் சொன்னாள் “ம்ம் எல்லாம் என் நேரம்” என்று ரேகா சலித்துக்கொண்டாள் அதன்பிறகு நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க..... இதோ ரகு யுஎஸ் போய் இன்றோடு ஒருவாரமாகிவிட்டது.... ரகு அடிக்கடி ரேகாவின் மூலமாக மான்சியிடம் பேச முயற்சித்தான்... மான்சி இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டாள் கல்லூரியின் இறுதிநாளில் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு.... ஊருக்கு செல்ல தனது மாமாவின் வரவுக்காக காத்திருந்தாள்..... ரேகா அவளைவிட்டு நகராமல் அவளுடனே இருந்தாள்..... ரேகாவுக்கு மான்சியை பிரிவது தன் உயிரையே பிரிவது போல முகத்தை துக்கமாக வைத்திருந்தாள் “ஏய் மான்சி நீ ஊருக்கு போனதும் உடனே ஒரு செல்போன் வாங்குடி.... அப்பதான் தினமும் உன்கூட பேச முடியும்.... ரகுகூட நேத்து போன் பண்ணி உனக்கு ஒரு செல் வாங்கிக்கொடுக்கச் சொன்னான்.... நான் வாங்கித் தரவா மான்சி” என்று ரேகா கவலையுடன் கேட்க “ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம் நான் எதுன்னா என் மாமாவோட செல்ல இருந்து பேசறேன்.... ஆனா நீ என் மாமா நம்பரை உன் அண்ணன்கிட்ட குடக்கதே.... அப்புறம் மாமா ஏதாவது தப்பா நெனைப்பாரு ரேகா ப்ளீஸ்”என்று மான்சி கெஞ்ச.... ரேகா சரியென்று தலையசைத்தாள் மான்சிக்கு ஏன் இன்னும் மாமாவை காணவில்லை என்று கவலையுடன் கல்லூரியின் வாசலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மான்சிக்கு மாமாவின் ஊர் பாபநாசம் போவதென்றால் ரொம்ப பிடிக்கும்..... அங்கே போய் இருக்கும் கொஞ்ச நாளில் அருகில் இருக்கும் முண்டன்துறை, மணிமுத்தாறு, பாபநாசம் அருவி, களக்காடு, பேச்சிப்பாறை... என்று தினமும் ஒரு சுற்றுவதுதான் அவளுக்கு வேலை..... மாமாவின் மகன்கள் இருவரும் இவளைவிட இளையவர்கள் என்பதால் இவளுக்கு அவர்களுடன் அரட்டையடிக்கவே நேரம் பத்தாது.... இளவயதில் தன் தாயை பறிகொடுத்திருந்தாலும்..... தன் தாயைவிட பலமடங்கு பாசத்தை கொட்டும் தன் மாமாவை மான்சி கடவுளுக்கு நிகராக எண்ணினாள் அவளுடைய காத்திருப்பு வீணாகாமல் அவள் மாமா வந்து சேர மான்சி உற்சாகத்துடன் எழுந்து அவரை நோக்கி போனாள் “மான்சியம்மா மன்னிச்சுக்கோம்மா பஸ் கிடைக்க கொஞ்சம் லேட்டாயிருச்சு..... எல்லார்கிட்டேயும் சொல்லிட்டயா நாம கிளம்பலாமா மான்சி” என்று அண்ணாமலை கேட்க “ம் நான் எப்பவோ ரெடி மாமா உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்”.... என்ற மான்சி ரேகாவிடம் திரும்பி “நான் கிளம்பறேன் ரேகா” என்று கூற.... ரேகா சோகமாக தலையசைத்து மான்சிக்கு விடைகொடுத்தாள் Sexy Legs 06-30-2011, 11:33 PM அந்திமாலைப் பொழுது,இரவுப் பெண்ணின் வருகைக்காக, மரங்கள் மலர்தூவ, தென்றல் தாலாட்ட, சூரியன் நாணிச் சிவந்து மேகங்களுக்கு பின்னால் தன் முகம் மறைக்க, சந்திரன் வரட்டுமா வேண்டாமா என்பது மெல்லிய கீற்றாய் தலைகாட்ட, இருள் தனது கரங்களால் பூமியை தழுவும், அழகான மாலைப்பொழுது.. தென்காசியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செல்லும் வழியில், மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் ஒரு அழகான மலைகிராமம்,....எங்கு பார்தாலும் பசுமை, தூரத்தே தெரிந்த மலைத்தொடரும், குளிர்ச்சியுடன் வரும் இதமான சாரல் காற்றும், வெகு ரம்யமான ஊர் அங்கே இருந்த மலையடிவாரத்தில், ஒரு மிகப்பெரிய மரப்பட்டறையில் பிரமாண்டமான மரங்களை துண்டு போடும் இஞ்ஜினின் பெல்ட் அறுந்துவிட, அங்கிருந்தவர்கள் புதிய பெல்ட்டை மாட்டும் முயற்சியில் இருந்தனர், அந்த பட்டரையின் உரிமையாளன் சத்யனும் அவர்களுடன் சோர்ந்து பள்ளத்தில் இறங்கி பெல்டை மாட்ட, அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த சட்டையில் ஆயிலும் கிரீஸ்ம் கறையை ஏற்படுத்தியது,... சத்யனுக்கு உதவிக்கொண்டு இருந்த பட்டரையின் மேஸ்திரி வீரமுத்து “ சின்னய்யா நீங்க மேல ஏறுங்க, இருக்கிறவங்க பார்த்துக்கிறோம், உங்க துணியெல்லாம் கறையாகுது, அவ்வளவுதான் சின்னய்யா வேலைமுடிஞ்சிருச்சு, நீங்க மொதல்ல மேல ஏறுங்கய்யா”... என்று அதட்டி அன்பு கட்டளையாக சொல்ல சத்யன் அவனைப்பார்த்து சிரித்துவிட்டு “ இதுக்கு மேலயும் நான் இங்க நின்னா நீயே என்னை தூக்கி மேல போட்டுருவ போல.... ம் என்ன முத்து அப்படித்தான” என்று சிரித்தப்படி கேட்டுவிட்டு மேலே ஏறினான் அவன் மேலே வருவதற்காகவே காத்திருந்து போல, முத்துவின் பொண்டாட்டி அமுதா ஒரு டீசர்டை எடுத்துவந்து, அவனிடம் கொடுத்து “ உங்க அறையில இருந்து எடுத்துட்டு வந்தேன் சின்னய்யா, இதை போட்டுகிட்டு சட்டையை கழட்டுங்க நான் தொவச்சு எடுத்துட்டு வர்றேன், ம் கழட்டுங்க சின்னய்யா”.. என்று பிடிவாதமாக கேட்க சத்யன் பள்ளத்தில் இருந்த முத்துவை எட்டிப்பார்த்து விட்டு “ ஏய் உனக்கு ரொம்ப குளிர்விட்டுபோச்சுடி உள்ள உன் புருஷன் இருக்காங்குற பயமே இல்லாம என்கிட்ட சட்டையை கழட்டச் சொல்ற, ம் உன்னையெல்லாம் நல்லா வேலை வாங்கினாதான் கொழுப்பு அடங்கும்” என்று நக்கலாக கூறியபடி சத்யன் தனது சட்டையை கழட்டி அமுதாவின் தோளில் போட்டுவிட்டு அவள் கையில் இருந்த டீசர்டை வாங்கி தலை வழியாக மாட்டினான் அமுதா தன் தோளில் கிடந்த சத்யனின் சட்டையில் வந்த வியர்வை வாசனையும் அவன் உபயோகிக்கும் பாடி ஸ்ப்ரேயின் வாசனையும் கலந்து ஒருவித ரம்யமான வாசனை வர அந்த சட்டையை எடுத்து தன் முகத்தை மூடி வாசனையை அழமாக உள்ளித்தாள் “ ஏய் அமுதா அதை ஏன்டி மோந்து பார்க்கிற அதான் நான் இருக்கேன்ல, இன்னிக்கு நைட்டு வர்றேன், என் உடம்பு முழுக்க நல்லா நக்கிப்பாரு” என்று கிண்டல் குரலில் கூறியவன், பள்ளத்தில் வேலை முடிந்து எல்லோரு மேலே வருவது தெரிய “ ஏய் மொதல்ல இடத்தை காலிபண்ணு உள்ள எல்லா வேலையும் முடிஞ்சுபோச்சு, உன் புருஷன் இப்போ மேல வரப்போறான், போடி இங்கருந்து” என்று ரகசியமாக அமுதாவை அதட்ட.... அவள் இவனுக்கு உதட்டை சுழித்து காட்டிவிட்டு சட்டையை தோளில் போட்டுக்கொண்டு திரும்ப..... “ போடி போ நைட்டு வந்து அந்த சுழிக்கிற உதட்டை கடிச்சிர்றேன்” என்று சத்யன் கிசுகிசுப்பாய் கூறினான் இஞ்ஜின் வேலை முடிந்து மேலே ஏறிவந்த முத்து..... திரும்பி தன் மனைவி தோளில் சத்யனின் சட்டையை பார்த்துவிட்டு “ என்னய்யா சட்டையை கழட்டி அமுதாகிட்ட குடுத்தீங்களா,... அதுவும் சரிதான் இப்பவே நல்லா தொவச்சிட்டா கறை போயிரும்” என்று வெகுளித்தனமாக கூறிவிட்டு கறையாகிப்போன தனது காக்கிச்சட்டையை கழட்டினான் “சரி முத்து நான் என் ரூமுக்கு போறேன் நீபோய் குளிச்சுட்டு வா கொஞ்சம் கணக்கெல்லாம் பார்க்கனும், லோடு எல்லாம் வேற போகாம அப்படியே நின்னுபோச்சு, மொதல்ல அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணனும், நீ கொஞ்சம் சீக்கிரமா வா முத்து எல்லாத்தையும் பார்த்திரலாம்” என்று கூறிய சத்யன் வழியில் கிடந்த ராச்சஸ மரங்களை லாவகமாக தாண்டி சற்று தொலைவில் இருந்த ஏஸி செய்யப்பட்ட தன்னுடைய சிறிய வீட்டுக்கு போனான். சத்யன் அந்த கிராமத்து பெரிய வீட்டுக்காரரின் ஒரே வாரிசு, நல்ல உயரம், மாநிறத்துக்கும் சற்று கீழாக.... அடர்த்தியான மீசையுடன், ரொம்ப கம்பீரமாக இருப்பான், பெயருக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லை, பெருத்த பணத்தால் பிஞ்சிலேயே பழுத்து விட்டவன், தனது தாயைத் தவிர மற்ற பெண்களின் மீது கொஞ்சம் கூட மரியாதையோ நம்பிக்கையோ இல்லாதவன், ஏனென்றால் அவன் அறிந்த பெண்களின் தரம் அப்படி, சில பெண்கள் இவனின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கிகிடக்க, சில பெண்கள் இவனின் பணத்திலும் அதிகாரத்திலும் மயங்கிகிடந்தனர் நமது குடும்பத்தில் இவனாவது படிக்கட்டும் என்று இவன் அப்பா, இவனை சென்னையில் ஒரு பிரபலமான கல்லுரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க, இவன் நான்கு வருடம் படித்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது சிவில் இன்ஜினியரிங்க்கே பதிமூன்று அரியர் வைத்துவிட்டு வந்தான் ..... அதையும் இந்த மூன்று வருடங்களாக எழுதி கிளியர் பண்ண முயற்சிக்கிறான், ஆனால் அதில் ஒன்றைக் கூட இன்னும் கிளியர் பண்ணவில்லை, இவனுக்கு படிப்புதான் வரவில்லையே தவிர பிசினஸில் ரொம்ப கெட்டிக்காரன், தனது பரம்பரையே நெல்மண்டி வைத்து ரைஸ்மில்கள் நடத்த, இவன் அந்த பழைய ரைஸ்மில்லை நவீனமாக்கி மாடர்ன் ரைஸ்மில்லாக மாற்றியிருந்தான், அதன்பிறகு இந்த பிரமாண்டமான மரப்பட்டறையை ஆரம்பித்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மரங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்துகொண்டு இருந்தான் ஆனால் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வதில் அதைவிட கெட்டிக்காரன், இவனுக்கு எப்போதுமே ஜாலியாக இருக்கவேண்டும், பெண்கள் விஷயத்தில் இவன் பலகீனமானவனா இல்லை இவனிடம் வரும் பெண்கள் பலகீனமானவர்களா என்பது ஒரு புரியாத புதிர், அந்தளவுக்கு பெண்களை இவன் தேடிப் போவான், சிலநேரங்களில் பெண்கள் இவனைத்தேடி வருவார்கள், இவனிடம் ஒருமுறை படுத்த பெண்கள் மறுபடியும் தானாகவே இவனைத்தேடி வருவார்கள், அவ்வளவு திருப்தியாக பெண்களை அனுபவிப்பான், ஆனால் ரொம்பவும் பாதுகாப்பாகத்தான், இதோ இந்த அமுதாகூட இவனின் பேச்சிலும் கம்பீரத்திலும் மயங்கி இவனிடம் தானாகவே வந்து தன்னை இழந்தவள்தான், Sexy Legs 06-30-2011, 11:33 PM இவனின் விஷங்களை ஓரளவுக்கு கேள்விப்பட்ட இவன் அம்மா இவனுக்கு உடனடியாக திருமணம் செய்யவேண்டும் என்று தன் கணவனை நச்சரித்து, இப்போது இருவரும் மும்முரமாக இவனுக்கு திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் எந்த பெண்ணும் அமையாமல் தவித்து கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இப்படிபட்ட சத்யனுக்கு ஒருப் பெண்ணை திருமணம் செய்துவைத்தால், அந்த பெண்ணின் கதி என்னாகும், பாவம் அதோ கதிதான் முத்து சத்யன் போவதையே ஆச்சரியமாக பார்த்தவன் பக்கத்தில் இருந்த இஞ்ஜின் ஆப்ரேட்டரிடம் ,.... “யப்பா என்னமாதிரி மனுஷன் இவரு, எவ்வளவு சுறுசுறுப்பு, காலையில பார்த்தா வீட்டுக்கு பின்னாடி இருக்கிற ரைஸ்மில்லை கவனிச்சுகிறாரு, அப்புறமா பண்ணையை வேற போய் பார்த்துக்கறாரு, மத்தியானத்துக்கு மேல இங்கவந்து பட்டறை வேலையையும் பார்த்துகிறார், ம் இந்த மாதிரி மனுஷன் வேற எங்கய்யா இருப்பாரு” என்று சத்யனைப் பற்றி பெருமையாக பேசினான் தென்காசியில் சத்யனுக்கு ஒரு ரசிகர்மன்றம் ஆரம்பித்தால் அதற்க்கு முத்துவை கொள்கைப்பரப்பு செயலாராக நியமிக்கலாம், அந்தளவுக்கு சத்யன் மேல் மரியாதையும் அன்பும் வைத்திருப்பவன், சத்யனின் சுண்டுவிரல் நகம் பெயர்ந்துவிட்டால் தனது கட்டைவிரலை அறுத்துக்கொள்ளும், ஒரு நேர்மையான விசுவாசி முத்து முத்து பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஆப்ரேட்டர் ‘ ம் அதையெல்லாம் மட்டுமா கவனிச்சுக்கறார் உன் பொண்டாட்டியையும் சேர்த்துத்தான் நல்லா கவனிக்கிறார்’ என்று வாய்வரை வந்ததை சொல்லாமல், நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு, மொதல்ல நம்ம வேலை ஒழுங்கா காப்பாத்திக்கனும், என நினைத்து தனது வேலையை பார்க்கப் போனான் பட்டறையில் வேலை செய்பவர்களுக்காக பட்டறைக்குள்ளேயே சிமிண்ட் சீட் போடப்பட்ட சிறு சிறு வீடுகளை கட்டிக்கொடுத்திருந்தான் சத்யன் முத்து தனது சின்ன முதலாளி சத்யனைப் பற்றியே யோசித்தபடி தனது வீட்டுக்குள் போக, அங்கே அமுதா சத்யனின் சட்டையை ரொம்ப கவனமாக சோப்புப் போட்டு தேய்த்துக்கொண்டு இருந்தாள் “ ஏய் அமுதா சின்னய்யா சட்டையை கவனமா தேய் ரொம்ப விலை ஒசந்தது” என்று அமுதாவிடம் சொல்லிவிட்டு தன் சட்டையை தானே துவைத்து காயப்போட்டுவிட்டு அவசரமாக குளிக்க போனான் தனது அறைக்கு வந்த சத்யன் ஏஸியை ஆன் செய்துவிட்டு அங்கே இருந்த கட்டிலில் உட்கார்ந்து, மணிக்கட்டை திருப்பி நேரம் பார்க்க, மணி ஆறு பத்து ஆகியிருந்தது, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்,...... வீட்டுக்கு போனா தூங்கமுடியாது, ஏற்கனவே ஐஞ்சு நாளா எதுவுமில்லாம காஞ்சுபோய் கிடக்கேன் இந்த அமுதா வேற நல்லா உசுப்பேத்தி விட்டுட்டா, நேரமாகி போச்சு இல்லேன்னா வேற எங்கயாவது போகலாம், இன்னிக்கு இங்கேயே இருந்து முத்துவை பட்டறையில் லோடு ஏத்தச் சொல்லிட்டு அமுதாவை இங்க வரச்சொல்லி போட வேண்டியதுதான், என சத்யன் யோசிக்கும் போதே வெளியேயிருந்து முத்துவின் குரல் சின்னய்யா என்று கேட்க சத்யன் எழுந்து சென்று கதவைத் திறந்து “வா முத்து” என்று கூப்பிட முத்துவின் பின்னாலேயே அமுதா சத்யனின் சட்டையை தோளில் போட்டுக்கொண்டு உள்ளே வந்தாள் “ சட்டையை பாத்ரூம்ல இருக்கிற கம்பியில மாட்டு அமுதா நல்லா காஞ்சுரும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு முத்துவிடம் சில கணக்குகளை பற்றி பேசிவிட்டு இன்று இரவு அனுப்பவேண்டிய மற்றும் வரவேண்டிய லோடுகளை பற்றிய விவரங்களை சொன்னான் சத்யன் அப்போது முத்துவுக்கு பின்னாலிருந்து அமுதா ஏதோ ஜாடைக்காட்ட, அதை புரிந்துகொண்ட சத்யன், “ஏன் முத்து ரெண்டு பசங்களை வச்சுகிட்டு நீ ஏன் இங்க சின்ன வீட்ல இருந்து சிரமப்படுற, இன்னும் கொஞ்சநாள்ல உன் பையன் ஸ்கூலுக்கு போகனும், இங்கேயிருந்து ஸ்கூல் வேற ரொம்ப தூரம், என்ன செய்யலாம் முத்து” என்று சத்யன் முத்துவிடம் யோசனைகேட்க,...... அமுதா தன் கணவன் என்ன சொல்லப்போகிறானோ என்று பதட்டத்துடன் முத்துவின் வார்த்தைக்காக காத்திருக்க முத்துவுக்கு தன் சின்னமுதலாளி தன் குடும்பத்தைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பது, அவனுக்கு தலைகால் புரியாத சந்தோஷத்தை கொடுக்க “ நீங்களேஎன்ன பண்றதுன்னு சொல்லுங்கய்யா அதுமாதிரியே நான் செய்றேன்” என்று முகமெல்லாம் சிரிப்புடன் சொன்னான் “ நானும் இதைப்பத்தி யோசிச்சு வச்சுருக்கேன் முத்து, நம்ம வீட்டுக்கு பின்னால வீட்டுவேலை செய்றவங்களுக்குன்னு அப்பா சின்ன சின்ன வீடுகளை கட்டிவச்சிருக்கார், நீ குடும்பத்தோட அங்க வந்திரு, நீ பட்டறைக்கு வேலைக்கு வந்ததும், அமுதா அம்மாவுக்கு உதவியா வீட்டு வேலை செய்யட்டும், இல்லைன்னா ரைஸ்மில்லுல கூட அவளுக்கு தெரிஞ்ச ஏதாவது வேலை செய்யட்டும், பசங்களையும் கீழ்கடையம் ஸ்கூல்ல சேர்த்திறலாம், என்ன சொல்ற முத்து நல்லா யோசிச்சு சொல்லு” என்று நைசாக பேசிய சத்யன் முத்துவின் பின்னால் இருந்த அமுதாவைப் பார்த்து ‘எப்படி’ என்பதுபோல் கண்ணால் கேட்க, அவள் சிரிப்புடன் கண்சிமிட்டினாள் இவர்களின் எண்ணங்களை அறியாத முத்து “நான் என்ன சொல்றது சின்னய்யா, உங்க இஷ்டப்படி செய்யுங்க, என்னிக்கு வரனும்னு மட்டும் சொல்லுங்க அன்னிக்கி குடும்பத்தை கொண்டுவந்து அங்கே விட்டுர்றேன்” என்று அப்பாவியாக முத்து கூற Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > யாருக்கு மான்சி ..? Powered By Indian Sex Stories, © 2005-2013 Mobile Sex Stories